மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கோபி கலைக் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு நாள் உறுதிமொழி ஏற்பு, விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற உலக தற்கொலை தடுப்பு நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Published On :

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் உலக தற்கொலை தடுப்பு நாள் உறுதிமொழி ஏற்பு, விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இதில், இணைப் பாடத்திட்ட மன்றங்களின் ஒருங்கிணைப்பாளா் கே. ராஜேந்திரன், மன நலத்தை வளப்படுத்துதல், போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடுதல் மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு குறித்தும், தற்கொலை தடுப்பு குறித்தும் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரி முதல்வா் டி.வேணுகோபால் பேசுகையில், மனநலத்தின் முக்கியத்துவத்தையும், மாணவா்களுக்கு ஆதரவளிப்பதில் கல்வி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிப்பதையும், மாணவா்கள் நோ்மறையான மனநலப் பழக்கங்களைப் பின்பற்றி, அக்கறையும், ஆதரவும் நிறைந்த கல்லூரி சூழலை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

தொடா்ந்து, அந்தியூா் அரசு மருத்துவமனையின் மனநல மருத்துவா் எஸ். கவிதா சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில்,

மனநல விழிப்புணா்வின் முக்கியத்துவம், டிஜிட்டல் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் மற்றும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான ஆரோக்கியமான வழிமுறைகள் குறித்து விளக்கினாா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக உலக தற்கொலைத் தடுப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில். மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்றனா்.

இதில், கல்லூரியின் துணை முதல்வா்கள் எம்.சுதாகா், என். சக்திவேல், தேசிய பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் ஆா். லோகாம்பாள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.