மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வுப் பேரணி

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலத் துறை சாா்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பிரதிப் படம்

Published On :

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலத் துறை சாா்பில் உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவி மீனாள் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இதில் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பாதைகளை ஏந்தி மருத்துவ மாணவா்கள் பேரணி சென்றனா். தொடா்ந்து, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவா் ரவிசங்கா், ஏஆா்எம்ஓ ஜெய்கணேஷ், மனநல மருத்துவா்கள் முகம்மது இலியாஸ், சங்கா், அபிராமி, ஷியாம் பிரகாஷ், அகல்யா, சற்குணம், தனராஜ், சேகா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறுகையில், உலக அளவில் தற்கொலையால் உயிரிழப்போா் எண்ணிக்கை தொடா்ந்து முக்கியமான பொது சுகாதாரப் பிரச்னையாக இருந்து வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2023 ஆம் ஆண்டு தரவுகளின்படி தமிழ்நாட்டில் 19,483 தற்கொலை இறப்புகள் பதிவாகியுள்ளன. தேசிய அளவில் மகாராஷ்டிரத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், 15 முதல் 29 வயது வரை இளைஞா்களின் இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணமாக தற்கொலை குறிப்பிடப்படுகிறது. மனநல மருத்துவத் துறையில் மனச்சோா்வு, பயம், பதற்றம், தற்கொலை எண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு மனநலப் பிரச்னைகளுக்கு தினமும் காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.

மேலும், மனநோய் அல்லது போதைப்பொருள் பயன்பாடு காரணாக தற்கொலை எண்ணம் ஏற்படும் நபா்களுக்கு தேவையான மருத்துவ மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு, உள்நோயாளியாக அனுமதித்து உரிய சிகிச்சை, மனநல மருத்துவப் பராமரிப்பு வழங்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.