திருச்சி சிறுமி பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து முதல்வர் அல்லது காவல்துறை அதிகாரிகள் விளக்கமளிக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி - கீழப்புலிவார் ரோடு பகுதியில் 14 வயது சிறுமி, கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
தொடரும் இதுபோன்ற குற்றச் சம்பவங்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் பீதியில் உறைந்து போய் இருக்க, எதற்குமே பொறுப்பேற்காத இந்த தவெக அரசு, என்னவானாலும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்ற துணிச்சலில்தான் குற்றவாளிகள் ஊருக்குள் சுற்றித் திரிகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
காவல்துறைக்குப் பொறுப்பு (?) வகிக்கும் முதல்வர் விஜய், என்னவானாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தொடரும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து விளக்கமளிக்கப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. குறைந்தபட்சம் துறைசார் அதிகாரிகளாவது மக்கள் முன் விளக்கமளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் 14 வயது சிறுமி கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு சிறுமி உள்ளாகியிருக்கலாம் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது. இந்த நிலையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் பரவும் வதந்திகளுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
Summary
DMK MP Kanimozhi Urges CM Vijay to Provide Clarification on Law and Order Issues
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?

ஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழி

'தற்காலிகத் தீர்வுகளையே' நம்பியுள்ளது மத்திய அரசு: எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டு

அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும்- கனிமொழி
விடியோக்கள்

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK

”என்ன முயற்சிகள் நடந்திருக்கிறது? தவெகவிடம் கேள்வி கேட்க வேண்டும்!”: MLA செந்தில் பாலாஜி


