தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை என மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களுடன் பெ. சண்முகம் பேசியதாவது:
''தவெகவுக்கு ஆதரவு நிலைப்பாடு என்பது சுயேட்சையாக எடுத்த முடிவு என்பதை முன்பே தெளிவாகக் கூறிவிட்டோம். இன்னொரு கட்சியிடம் கேட்டு முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகளில், மதச்சார்பற்ற பிரச்னைகள், ஒத்த கருத்துடைய பிரச்னைகளில் திமுகவுடன் இணைந்து போராடுவோம் எனக் கூறியுள்ளோம். அதே நிலைப்பாடுதான் இப்போதும் உள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்பது இப்போது இல்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, 3 மாதங்களுக்குக் கூட தாங்காது என சொல்லக் கூடாது. மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி என யார் கூறினாலும் அது தவறு. எல்லா வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றிவிட முடியாது.
இங்கு எதுவும் புதிதாக நடந்துவிடவில்லை. அதிமுகவின் அழிவுக்கு பாஜகதான் காரணம். பாஜகவின் மதவெறி நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் உடன் இணைந்து உருவாக்கியது இந்தியா கூட்டணி. எங்கள் அகில இந்திய தலைவர்கள் அதில் பங்கேற்பார்கள்'' என பெ. சண்முகம் குறிப்பிட்டார்.
Summary
DMK alliance no longer exists CPIM Shanmugam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









