சென்னை மற்றும் புறநகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வெய்யில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இரவில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.
கோடை காலத்தின் கத்தரி வெய்யில் முடிந்த பிறகும் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வெய்யிலின் தாக்கம் இருந்து வந்தது. வேலூர், சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது.
சென்னையிலும் அதிக அளவிலான வெப்பம் பதிவான நிலையில், இன்று இரவு திடீரென மழை பெய்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், வானகரம், பூவிருந்தவல்லி, திருமுல்லைவாயல் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
''தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு (இரவு 10 மணி வரை) கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, சேலம், தென்காசி, தேனி, நீலகிரி, நெல்லை, திருப்பூர் மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு'' உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Widespread rain in Chennai and its suburbs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பூரில் பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் மிதமான மழை

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

சென்னையைக் குளிர்வித்த பலத்த மழை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி




