மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

இயற்கை அளித்த கொடைதான் முதல்வர் விஜய்: செங்கோட்டையன்

முதல்வர் விஜய் பற்றி அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குறித்து...

News image

முதல்வர் விஜய்யுடன் அமைச்சர் செங்கோட்டையன் - கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2026, 10:41 am IST

மக்களின் நலன்களுக்கான சிந்தனையோடு செயல்படுகிற ஒரே முதல்வராக விஜய் திகழ்வதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பேசியதாவது, "ஜோசப் விஜய்யின் பெயரைச் சொன்னாலே சிலருக்கு அச்சம். நாட்டு மக்களின் நலன் காண்கிற முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, தமிழகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்காக இயற்கையால் கொடுக்கப்பட்டிருக்கிற ஒரு கொடையாக விஜய் விளங்கிக் கொண்டிருக்கிறார்.

செங்கோட்டையன் எங்கே செல்கிறார்? என எல்லோரும் கேலி பேசினார்கள். எம்ஜிஆரோடு பயணம் செய்தேன் - அவர் ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்தார். ஜெயலலிதாவுடன் பயணம் செய்தார் - அவரும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

இன்று தவெகவில் இணைந்து, ஆட்சி மாற்றப்பட்டிருக்கிறது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள், இன்று எதிர்க்கட்சியிலே அமர்ந்து கொண்டிருக்கின்றனர்.

உலகில் வாழும் அத்தனை தமிழர்களும் அவரின் (விஜய்) பிறந்தநாளை தங்களுடைய பிறந்தநாளைப்போல கொண்டாடுகின்றனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு, உலகில் உள்ள அனைத்து தமிழர்களின் உள்ளங்களில் வாழ்கிற ஒரே தலைவர்தான் விஜய். அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

மாநிலத்தின் நிதி நிலை எவ்வளவு நெருக்கடியாக இருந்தபோதிலும், மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களைப் படிப்படியாக நிறைவேற்றுவதற்கான பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

காலை 10 மணிக்குக் கோட்டைக்கு வந்தால், மாலை 4.30 வரையில் மக்களைச் சந்திப்பது. என்னென்ன திட்டங்களை நிறைவேற்றலாம் என்ற சிந்தனையோடு செயல்படுகிற ஒரே முதல்வராக விஜய் திகழ்கிறார். அவரைத் தவிர வேறு யாராலும் முடியாது என வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.

Summary

Chief Minister Vijay is a gift from nature, says Minister KA Sengottaiyan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.