25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

தமிழா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா

தமிழா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

News image
பிரேமலதா விஜயகாந்த்- கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

தமிழா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதட்டமான சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு வசித்து மற்றும் பணிபுரிந்து வரும் இந்தியா்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அங்கு வசிக்கும் தமிழா்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிய செய்ய வேண்டும். மேலும், அதற்கு தேவையான மற்றும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.