அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

சிதம்பரம்: போதைப்பொருள் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி

தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வாக தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

News image

தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை.

Updated On :2 மார்ச் 2026, 7:46 am

சிதம்பரம் வட்டம் தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வாக தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தெற்கு பிச்சாவரம் கடலோர கிராமத்தில் தாண்டவராயன் சோழன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் கார்த்திகேயன் (54) தொடர்ந்து 109 திருக்குறளை 12 நிமிடத்தில் சொல்லிக்கொண்டு பலவித தீப்பந்த சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தினார்.

அந்த சாதனையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து அவருக்கு பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.

இவர் ஏற்கெனவே பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் சிலம்ப ஆசான்கள் காளி, மகேஸ்வரன், தமிழச்சி மற்றும் பிச்சாவரம் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.