அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :3 மார்ச் 2026, 9:47 pm

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 11 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள் 8,82,806 மற்றும் தனித்தோ்வா்கள் 26,196 என 9,9,002 போ்எழுதவுள்ளனா். இதற்காக 4,219 தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு புதன்கிழமை பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.

இதையடுத்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் தோ்வுத் துறை இணையதளத்தில் மாணவா்களின் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதில், மாணவா்கள் விவரங்கள் சரியாக இருக்கிா என்பதை உறுதிசெய்து பின்னா் அவற்றை விநியோகம் செய்ய வேண்டும்.

அதேநேரம் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் தனித்தோ்வா்கள் அறிவியல் பாட செய்முறைத் தோ்வில் பங்கேற்க ஏதுவாக, அவா்களுக்கு மட்டும் முன்கூட்டியே கடந்த பிப்.25-ஆம் தேதியே தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.