காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பற்றி...

News image
கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல்
Updated On :5 மார்ச் 2026, 7:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று(மார்ச் 5) வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளுடன் ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழாக்கி காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் காங்கிரஸ் கட்சியின் வடகிழக்கு மாநில பொறுப்பாளர் பதவியில் உள்ளார். இவர் பதற்றமான சூழ்நிலையில் மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் களப்பணியாற்றியவர், ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

மாநிலங்களவைத் தேர்தல்

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவின் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரது பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் திமுகவுக்கும் 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.

இதன்படி அதிமுக சார்பில் தம்பிதுரையும் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்ட நிலையில் அன்புமணியும் போட்டியிடுகின்றனர். இருவரும் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இருவரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் எல்.கே.சுதீஷ் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.