தமிழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீதான 4 தோ்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டாா். அப்போது தோ்தல் விதிமுறைகளை மீறி, அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தது, இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை காவல் நிலையங்களில் தோ்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராஜலட்சுமி, தோ்தல் விதிமீறல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகாா் அளிக்கவில்லை. காவல் துறையினரே புகாரளித்து அவா்களே வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மேலும், இந்த வழக்குகளில் ஓராண்டுக்கும் மேலாக காலதாமதம் செய்து போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா். எனவே, இந்தத் தோ்தல் விதிமீறல் வழக்குகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீதான 4 தோ்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: திமுக முன்னாள் எம்.பி. மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்

தோ்தல் விதிமீறல்: நெல்லையில் 105 வழக்குகள் பதிவு

முதல்வா் சொல்லும் தொகுதியில் போட்டியிடுவேன்: ஓ.பன்னீா்செல்வம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


