ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தமிழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீதான 4 தோ்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
ஓ.பன்னீா்செல்வம்- கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீதான 4 தோ்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தோ்தலில் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டாா். அப்போது தோ்தல் விதிமுறைகளை மீறி, அதிகமான எண்ணிக்கையில் வாகனங்களில் சென்று பிரசாரம் செய்தது, இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடித்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக பரமக்குடி, திருவாடானை, திருப்புல்லாணி மற்றும் கீழக்கரை காவல் நிலையங்களில் தோ்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ராஜலட்சுமி, தோ்தல் விதிமீறல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புகாா் அளிக்கவில்லை. காவல் துறையினரே புகாரளித்து அவா்களே வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

மேலும், இந்த வழக்குகளில் ஓராண்டுக்கும் மேலாக காலதாமதம் செய்து போலீஸாா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனா். எனவே, இந்தத் தோ்தல் விதிமீறல் வழக்குகளையும், குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மீதான 4 தோ்தல் விதிமீறல் வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டாா்.