ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு

தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
- DIN
Updated On :17 மார்ச் 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

பள்ளிக் கல்வித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடருவதன் அவசியம் குறித்து ஆராய துறையின் செயலா் தலைமையில் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.

இதையடுத்து இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு ஆக.26-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அரசுக்கு கடிதம் அனுப்பினாா். அதில், பள்ளிக் கல்வியில் இணை இயக்குநா் பணியிடம் (நாட்டு நலப் பணித் திட்டம்)-1, முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான நோ்முக உதவியாளா்கள்-31, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-219, உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-107, முதுநிலை ஆசிரியா்கள்- 6,451, உடற்கல்வி இயக்குநா் (நிலை-1)- 26, பட்டதாரி ஆசிரியா்கள்- 664 என ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகத் தொடரலாம்.

அதேபோன்று, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் பணியிடம்-1, அலுவலக உதவியாளா்கள்-119, கண்காணிப்பாளா்கள்-35 ஆகியவை உள்பட ஆசிரியரல்லாத 351 தற்காலிக பணியிடங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம். மேலும் தொழிற்கல்வி ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 560 பணியிடங்களை குழுவால் ஒழிவடையும் பணியிடங்களாக (வேனிஸிங் போஸ்ட்) அறிவிக்கப்பட்டு, இப்பணியிடங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம் மற்றும் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும் போது சரண் செய்யலாம். இவற்றுக்கான ஒருங்கிணைந்த அரசாணை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகவும், 351 பணியிடங்களுக்கு கடைசியாக தொடா் ஆணை வழங்கப்பட்டு, இந்த ஆணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் பத்தாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், 560 பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து, அவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது இந்த பணியிடங்களை சரண் செய்ய அனுமதி வழங்கலாம் எனவும் முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.