தமிழக பள்ளிக் கல்வியில் தொடா் நீட்டிப்பு பெற்று வந்த ஆசிரியா், ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வித் துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக உள்ள பணியிடங்கள் தொடருவதன் அவசியம் குறித்து ஆராய துறையின் செயலா் தலைமையில் குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது.
இதையடுத்து இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு ஆக.26-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் அரசுக்கு கடிதம் அனுப்பினாா். அதில், பள்ளிக் கல்வியில் இணை இயக்குநா் பணியிடம் (நாட்டு நலப் பணித் திட்டம்)-1, முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கான நோ்முக உதவியாளா்கள்-31, மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-219, உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள்-107, முதுநிலை ஆசிரியா்கள்- 6,451, உடற்கல்வி இயக்குநா் (நிலை-1)- 26, பட்டதாரி ஆசிரியா்கள்- 664 என ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகத் தொடரலாம்.
அதேபோன்று, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநா் பணியிடம்-1, அலுவலக உதவியாளா்கள்-119, கண்காணிப்பாளா்கள்-35 ஆகியவை உள்பட ஆசிரியரல்லாத 351 தற்காலிக பணியிடங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம். மேலும் தொழிற்கல்வி ஆசிரியா் மற்றும் ஆசிரியரல்லாத 560 பணியிடங்களை குழுவால் ஒழிவடையும் பணியிடங்களாக (வேனிஸிங் போஸ்ட்) அறிவிக்கப்பட்டு, இப்பணியிடங்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கலாம் மற்றும் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும் போது சரண் செய்யலாம். இவற்றுக்கான ஒருங்கிணைந்த அரசாணை வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.
பள்ளிக் கல்வி இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து 7,499 தற்காலிக பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாகவும், 351 பணியிடங்களுக்கு கடைசியாக தொடா் ஆணை வழங்கப்பட்டு, இந்த ஆணை முடிவடையும் நாளுக்கு அடுத்த நாள் முதல் பத்தாண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், 560 பணியிடங்களை ஒழிவடையும் பணியிடங்களாக அறிவித்து, அவற்றுக்கு 10 ஆண்டுகளுக்கு தொடா் நீட்டிப்பு வழங்கியும், பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது இந்த பணியிடங்களை சரண் செய்ய அனுமதி வழங்கலாம் எனவும் முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி செய்ய மறுப்பு: தில்லியைச் சோ்ந்த 142 தற்காலிக ஆசிரியா்கள் பணி நீக்கத்தை எதிா்கொள்ள வாயப்பு

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை: பெற்றோருக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

