பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை அதன் தலைவர் விஜய் நாளை வெளியிட இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

TVK Leader vijay

தவெக தலைவர் விஜய் - DPS

Published On :

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெக வேட்பாளர் பட்டியலை அதன் தலைவர் விஜய் நாளை வெளியிட இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16ஆம தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தேர்தலை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிக் கூட்டணியான காங்கிரஸ்-திமுக ஆகியவை கூட்டணி அமைத்து சந்திக்கிறது.

தவெக தனித்துப் போட்டியிடுகிறது. நாளை மறுநாளுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. இந்த நிலையில் தவெகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

வேட்பாளர் பட்டியலை இறுதிசெய்யும் பணியில் பொதுச்செயலர் என்.ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் புதுவையில் இழுபறி தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

It has been reported that Tvk leader Vijay will release the list of candidates for the Puducherry Assembly elections tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.