ஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு 1 தொகுதி

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் பெ. ஜான் பாண்டியன்.
கோப்புப்படம்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் பெ. ஜான் பாண்டியன்.
கோப்புப்படம்
சென்னை : ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு பொது தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை முழுமனதுடன் ஏற்பதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவா் பெ. ஜான் பாண்டியன் இன்றிரவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக (27), பாமக (அன்புமணி) (18), அமமுக (11) ஆகிய கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து இக்கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கான இடங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில், இன்று(மார்ச் 24) தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...