இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

35 ஆண்டுகளாக தொடரும் கட்டுப்பாடு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News image

கொடிக் கம்பங்கள்

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:20 pm

தினமணி செய்திச் சேவை

- எஸ்.குமார்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சுமார் 35 ஆண்டுகளாக கட்சி அலுவலகம், கொடிக் கம்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அங்கு தேர்தல் நேரத்திலும் அரசியல் விளம்பரங்கள் செய்ய அனுமதிப்பது இல்லை என்றும் கூறப்படுகிறது. கோவை அருகே கணுவாய் மலையடிவாரத்தில் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காளப்பநாயக்கன்பாளையம் கிராமம்தான் அது.

இந்தக் கிராமத்தின் வித்தியாசமான கட்டுப்பாடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதற்கு ஒரு தேர்தல் நேரத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவமே காரணம் என்று கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டபோது காளப்பநாயக்கன்பாளையத்தில் இருதரப்பு கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதன் காரணமாக அந்த ஊரில் கடந்த 35 ஆண்டுகளாகத் தேர்தல் தொடர்பாக கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி, தேர்தல் நேரத்திலும் கட்சிக் கொடி, தோரணம் கட்டப்படுவதில்லை. சுவரொட்டி ஒட்டப்படுவதில்லை. சுவர் விளம்பரம் செய்யப்படுவதில்லை. பொதுக்கூட்டம் போன்றவையும் நடத்தப்படுவது இல்லை.

கட்சி வேட்பாளர்கள் தெருவில் நின்று வாக்கு சேகரிப்பது மட்டும் வழக்கத்தில் உள்ளது. கட்சிக் கொடியுடன் வாகனங்களில் வந்து பிரசாரம் செய்யவும், கட்சிக் கொடியுடன் பேரணியாகச் சென்று பிரசாரம் செய்யவும் அனுமதிப்பது இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர்.

இங்கு சில மாதங்களுக்கு முன்பு கட்சிக் கொடி நடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக கட்சிக் கொடிகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதால் தேர்தல் மோதல், தகராறு, வழக்குகள் இல்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். ஆனாலும், இந்தக் கிராமத்தில் பொதுவாக வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.