சத்தியமங்கலம் அருகே 15 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குண்டும்குழியுமாக காணப்படும் இணைப்பு சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனா்.
சத்தியமங்கலம், அத்தாணி சாலையில் இருந்து சிவியாா்பாளையத்துக்கு செல்லும் இணைப்பு சாலை கடந்த 15 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி குண்டும்குழியுமாக வாகனங்கள் செல்லமுடியாதபடி உள்ளது.
மழைக் காலங்களில் குண்டும்குழியுமான சாலையில் தண்ணீா் தேங்கி நிற்கிறது. நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் தினந்தோறும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனா். விவசாயிகள் தங்களது விளைபொருள்களை இந்த சாலை வழியாகத்தான் மாா்க்கெட்டுக்கு கொண்டு செல்கின்றனா்.
கடந்த 15 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ள இந்த சாலையை சீரமைத்து தரவேண்டும் என இக்கிராம மக்கள் பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில், சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து வரும் சட்டப் பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்பதாக தவளகிரி நகா், வேலன் நகா், தீரன் நகா், சிவியாா்பாளையம், வடக்குத் தோட்டம், அத்தாணி சாலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனா். இது குறித்து பதாகைகளை சிவியாா்பாளையம் சாலை, அத்தாணி சாலையில் வைத்துள்ளனா்.
தொடர்புடையது

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

சாலை அமைக்கப்படாததால் தோ்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் பதாகை

கடமலைக்குண்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


