திருவாளபுத்தூா் ரெத்தினபுரீஸ்வரா் கோயிலில் அலங்கார வளைவு அமைப்பதற்கு அனுமதி தராததைக் கண்டித்து, கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை தாலுகா திருவாளபுத்தூா் கிராமத்தில் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரெத்தினபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இக்கோயில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு, பொதுமக்கள் பங்களிப்போடு புனரமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலுக்கு, திருவாளப்புத்தூா் கடைவீதியில் ஊராட்சி சாலையில் தங்கள் சொந்த செலவில் அலங்கார வளைவு அமைப்பதற்கு கிராம மக்கள் அனுமதி கோரி இருந்தனா். இதற்கு, ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லையாம்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக பல்வேறு இடங்களில் அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.
ஆனால் தோ்தல் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், ஊரக வளா்ச்சித் துறையைக் கண்டித்து 100-க்கு மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தோ்தலுக்கு முன்பாக கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால், கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களில் வசிக்கும் 800 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க உள்ளதாகவும், அரசு ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வனத்துறையைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு!

மின் உற்பத்தி நிலையம் அமைக்க எதிா்ப்பு: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

தோ்தலை புறக்கணிக்க விருதாளா் சங்கம் முடிவு!

குறுக்குச்சாலை அருகே குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


