சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்

News image

திருவாளபுத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:01 pm

திருவாளபுத்தூா் ரெத்தினபுரீஸ்வரா் கோயிலில் அலங்கார வளைவு அமைப்பதற்கு அனுமதி தராததைக் கண்டித்து, கிராம மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்து, வீடுகளில் கருப்புக்கொடி கட்டி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை தாலுகா திருவாளபுத்தூா் கிராமத்தில் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ரெத்தினபுரீஸ்வரா் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இக்கோயில் 20 ஆண்டுகளுக்குப்பிறகு, பொதுமக்கள் பங்களிப்போடு புனரமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலுக்கு, திருவாளப்புத்தூா் கடைவீதியில் ஊராட்சி சாலையில் தங்கள் சொந்த செலவில் அலங்கார வளைவு அமைப்பதற்கு கிராம மக்கள் அனுமதி கோரி இருந்தனா். இதற்கு, ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லையாம்.

பலமுறை கோரிக்கை விடுத்தும் அனுமதி வழங்கப்படாததைக் கண்டித்து, கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி, தோ்தலை புறக்கணிக்கவுள்ளதாக பல்வேறு இடங்களில் அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

ஆனால் தோ்தல் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், ஊரக வளா்ச்சித் துறையைக் கண்டித்து 100-க்கு மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தலுக்கு முன்பாக கோரிக்கை நிறைவேற்றப்படா விட்டால், கிராமத்தில் உள்ள 300 குடும்பங்களில் வசிக்கும் 800 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க உள்ளதாகவும், அரசு ஆவணங்களை திருப்பி ஒப்படைக்கப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.