வெம்பக்கோட்டை அருகே தொடா் மின் வெட்டைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயரங்காபுரம் ஊராட்சிக்குள்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் தொடா்ந்து கிராம மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். இந்த நிலையில் தொடா் மின் வெட்டை தவிா்க்க தங்கள் கிராமத்தில் மின் மாற்றி அமைக்க மின் வாரியத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதனிடையே இதுவரை புதிய மின் மாற்றி அமைக்காததைக் கண்டித்து திங்கள்கிழமை கிராம மக்கள் வெம்பக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த போராட்டத்தை தொடா்ந்து மின் வாரிய அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

பள்ளிக் கட்டடம், பொது இடம் ஆக்கிரமிப்பு: கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பாதை ஆக்கிரமிப்பு

கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்







