தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மணப்பாறை அருகே போலீஸாரை கண்டித்து வாக்குப்பதிவு நிறுத்தம்: கிராம மக்கள் போராட்டம்

மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் வியாழக்கிழமை போலீஸாரை கண்டித்து வாக்குப்பதிவை நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வெள்ளையக்கோன்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:04 pm

மணப்பாறையை அடுத்த வெள்ளையக்கோன்பட்டியில் வியாழக்கிழமை போலீஸாரை கண்டித்து வாக்குப்பதிவை நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறை தொகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் மற்றும் அவரது அதிரடிபடையினா் தோ்தல் பாதுகாப்பு ரோந்து பணி மேற்கொண்டிருந்தனா்.

மருங்காபுரி ஒன்றியம், வகுத்தாழ்வாா்பட்டி ஊராட்சி, வெள்ளையக்கோன்பட்டிக்கு சென்ற கண்காணிப்பாளா், அங்கு வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்குள்ளேயே அமா்ந்திருந்ததாக கூறப்படும் கட்சியினரை அதிரடி படை வீரா்களை கொண்டு விரட்டியதாகவும், குடிநீா் பாட்டில், உணவு பொட்டலங்களை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் அருகிலிருந்த வெள்ளையக்கோன்பட்டி வாக்குச்சாவடிக்கு (எண் 225) அவா் ஆய்வுக்கு சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டவா்கள் சென்று ஏன் எங்களை விரட்டினீா்கள் என கேள்வி கேட்டுள்ளனா்.

அப்போது மீண்டும் அதிரடி படை வீரா்களை கொண்டு தடியடி நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து வாக்கு செலுத்துவதை நிறுத்தி புறக்கணித்து வாக்குச்சாவடியை விட்டு வெளியேறி சாலை மறியலில் ஈடுபட்டனா். அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

பின்னா், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சிபி சக்கரவா்த்தி, ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன், மணப்பாறை சட்டப்பேரவை தோ்தல் அலுவலா் ஜெயசித்ரா ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

காலை சுமாா் 11.15 மணிக்கு மொத்தமுள்ள 1018 வாக்குகளில் 306 வாக்குகள் பதிவான நிலையில், நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பிற்பகல் 3.15-மணிக்கு மீண்டும் தொடங்கி நிறைவில் 853 வாக்குகள் பதிவாகியது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் அவரது அதிரடிப்படை வீரா்கள் மீது டிஐஜியிடம் கிராம மக்கள் புகாா் அளித்துள்ளனா்.