மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கல்விக் கடன் ரத்து; செவிலியர்கள் பணி நிரந்தரம்! - அதிமுக வாக்குறுதிகள்

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அதிமுக வாக்குறுதி...

News image

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி

யூடியூப் / அதிமுக

Updated On :24 மார்ச் 2026, 12:15 pm

இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 24) வெளியிட்டார். இதில் 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே 3 கட்டங்களாக 16 வாக்குறுதிகளை அறிவித்திருந்த நிலையில், முழுத் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

இதில், கொத்தடிமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

மதம் மாறினாலும் பட்டியலின மக்களுக்கான சலுகைகள் தொடரும்.

இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு தனி பல்கலைக் கழகம் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர்கள் வீடு கட்டிக்கொள்ள குடியிருப்பு மனைகள் தரப்படும்.

அனைத்து மாநகராட்சிகளிலும் சுற்றுச் சாலைகள் அமைக்கப்படும்.

அனைத்து முக்கிய நகரங்கள், சுற்றுலா மையங்களில் இலவச வைஃபை வசதி.

கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.

நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் நெசவுக் கூடத்தோடு சேர்ந்த பசுமை வீடுகள்.

அறநிலையத் துறை கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.