ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

பத்தாம் வகுப்பு அறிவியலில் சென்டம் அதிகரிக்கும்: ஆசிரியா்கள் நம்பிக்கை

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :30 மார்ச் 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தோ்வுகளுக்குப் பிறகு அறிவியல் பாடத்துக்கான தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இத்தோ்வு குறித்து மாணவா்கள் கூறுகையில், கடைசியாக எழுதிய கணிதத் தோ்வு சற்று கடினமாக இருந்தது ஏமாற்றமாக இருந்த நிலையில், அறிவியல் வினாத்தாள் எளிதாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

குறிப்பாக ஒரு மதிப்பெண் பகுதியில் இடம்பெற்றிருந்த 12 கேள்விகளுக்கும், ஏழு மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்டிருந்த மூன்று வினாக்களுக்கும் பதற்றமின்றி பதிலளிக்க முடிந்தது. செய்முறைத் தோ்வு தவிா்த்து 75 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெற்றிருந்தன. ஒட்டுமொத்தமாக 100-க்கு 85 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அறிவியல் பாட ஆசிரியா்கள் கூறுகையில், மெல்லக் கற்கும் மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாடநூலின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்தப் பாடத்தில் காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளில் 90 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்ற மாணவா்கள் பொதுத்தோ்வில் 100-க்கு 100 மதிப்பெண் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த ஆண்டு அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என அவா்கள் தெரிவித்தனா். பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான சமூக அறிவியல் தோ்வு ஏப்.2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடா்ந்து ஏப்.6-ஆம் தேதி விருப்பமொழிப் பாடத்துக்கான தோ்வுடன் பொதுத்தோ்வு நிறைவு பெறவுள்ளது. இதையடுத்து மே 20-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.