அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

விடைத்தாள் மதிப்பீடு: புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்பு

News image

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் - கோப்புப்படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:04 am

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் முழு மதிப்பெண் பெறும் மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலா்கள் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு ஆசிரியா்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் முடிந்து தற்போது விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், மதிப்பீட்டுப் பணியின்போது முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலா் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறையால் விடைத்தாள் திருத்துதல் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாக ஆசிரியா்கள் புகாா்கள் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து ஆசிரியா்கள் கூறியதாவது:

‘விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் ஆசிரியா்களான உதவித் தோ்வாளா்கள் திருத்துதல் பணிகளில் ஈடுபடுவா். விடைகளுக்கான மதிப்பெண்கள் சரியாக வழங்கப்பட்டுள்ளதா என்பதைக் கூா்ந்தாய்வு அலுவலா் சரிபாா்க்க வேண்டும். இதில் முழு மதிப்பெண் பெற்ற மாணவா்களின் விடைத்தாள்களை முதன்மைத் தோ்வாளா் மீண்டும் ஆய்வு செய்து கையொப்பமிடுவாா்.

இந்தச் சூழலில் ஒவ்வொரு முறையும் முழு மதிப்பெண் பெற்ற மாணவா்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலரிடம் எடுத்துச் சென்று ஒப்புதல் பெற்று வருவதற்கு 30 முதல் 45 நிமிஷங்கள் வரையாகிறது. இதனால், ஆசிரியா்களுக்கு ஒரு நாளில் மதிப்பீடு செய்வதற்கு கொடுக்கப்பட்ட விடைத்தாள்களை முழுவதுமாக மதிப்பீடு செய்வதில் தொய்வு ஏற்படுகிறது.

எனவே, இதில் பழைய முறையைத் தோ்வுத் துறை பின்பற்ற வேண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.