சென்னை கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்திருந்தாலும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று மாலை 5.45 மணிக்கு கொளத்தூர் தொகுதிக்கு வந்துள்ளார்.
கொளத்தூருக்கு தன்னுடைய பிரசார வாகனத்தில் வந்த மு.க. ஸ்டாலின், தனக்காக வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இன்று மாலையே தலைவர்களில் முதல் ஆளாக மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளார் ஸ்டாலின்.
கொளத்தூர் தொகுதிக்கு வந்திருக்கும் மு.க. ஸ்டாலின், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் வந்து நன்றி தெரிவித்து வருகிறார். அவரை ஆயிரக்கணக்கான திமுகவினர் மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
அவருடைய வாகனத்தில் சேகர்பாபு நின்று கொண்டு வருகிறார். தோல்வியடைந்த நிலையிலும், தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து கண்கலங்கியபடியே வந்துகொண்டிருந்தார்.
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். 18 சுற்றுகளைக் கொண்ட வாக்கு எண்ணிக்கையில் ஒரே ஒரு சுற்று முடிவில் மட்டுமே திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலைக்கு வந்தார். தபால் வாக்குகளிலும் பின்தங்கியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
MK Stalin came to Kolathur to express his gratitude! Volunteers shed tears!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி!
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு!
கொளத்தூர் எனக்கு செல்லக் குழந்தை! முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




