திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே! பேரவைச் செயலரிடம் கடிதம்

பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வாவதில் சிக்கல்? 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு

News image

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி - ENS

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னை : சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்க 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கருப்பையாவிடமும் பேரவைச் செயலரிடமும் இன்று (மே 11) கடிதம் வழங்கினர்.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் வென்று எம்எல்ஏவாகத் தகுதி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பதவியேற்பு திங்கள்கிழமை (மே 11) காலை அவை கூடியதும் நடைபெற்ற நிலையில், அதிமுகவில் சி. வி. சண்முகம் தவிர எம்எல்ஏவாகத் தகுதி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பேரவை உறுப்பினர்களாக இன்று காலையில் பதவியேற்றனர். இந்த நிலையில், பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழுவின் தலைவராக எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்க தளவாய் சுந்தரம், ஓ. எஸ். மணியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமாரவேல் உள்பட 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு அளித்துள்ளனர்.

ஆனால், மொத்தமுள்ள 47 அதிமுக எம்எல்ஏக்களில் 36 எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்க ஆதரவு என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவை குழுத் தலைவராகவும், சி.வி.சண்முகம் துணைத் தலைவராகவும் ஆவதற்கு ஆதரவளித்து அவா்கள் கையொப்பமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிமுகவில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரணியில் இருப்பது அம்பலமாகியுள்ளது. இதனிடையே, எஸ். பி. வேலுமணி, ஆர். காமராஜ், சி. விஜயபாஸ்கர், நெய்வேலி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்களுடன் சி. வி. சண்முகம் ஆலோசனை நடத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எம்எல்ஏவாகப் பதவியேற்க இன்று மாலை மீண்டும் சட்டப்பேரவைக்கு தமது காரில் புறப்பட்ட சி. வி. சண்முகத்திடம் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், “இன்னும் 2 - 3 மணி நேரம் பொறுத்திருங்கள்” எனக் கூறிச் சென்றார். சி. வி. சண்முகம் இன்று மாலையில் எம்எல்ஏவாக தனியாகப் பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனால் அக்கட்சியில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. இரு அணிகளாக அதிமுக பிளவுபட்டிருப்பதை அண்மை சம்பவங்கள் தெளிவாகக் காட்டியுள்ளன. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Summary

Only 17 MLAs expressed support for electing Edappadi Palaniswami as the leader of the AIADMK legislative party in the Assembly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.