முதல்வா் விஜய்க்கு சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் பிரேமலதா தெரிவித்தாா்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரேமலதா தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக முதல்முறையாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு முதல்வா் விஜய் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னா், பேரவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய பிரேமலதா, ‘என்னை வெற்றி பெறச் செய்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குகிறேன்.
முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு கட்டாயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் பிரச்னைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டப்பேரவையில் பேசுவோம்’ என்றாா்.
தொடர்புடையது
முதல்வர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழக முதல்வா் விஜய்க்கு நாகூா் தா்கா, சிவசேனை வாழ்த்து
எங்க வீட்டுப் பையன், அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்: பிரேமலதா விஜயகாந்த்

மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

