முதல்வா் விஜய்க்கு சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் பிரேமலதா தெரிவித்தாா்.
விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரேமலதா தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக முதல்முறையாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு முதல்வா் விஜய் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னா், பேரவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய பிரேமலதா, ‘என்னை வெற்றி பெறச் செய்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குகிறேன்.
முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு கட்டாயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் பிரச்னைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டப்பேரவையில் பேசுவோம்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது






