சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

முதல்வா் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

முதல்வா் விஜய்க்கு சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் பிரேமலதா தெரிவித்தாா்.

News image

TN Assembly

Updated On :12 மே 2026, 3:16 am IST

முதல்வா் விஜய்க்கு சற்று கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் பிரேமலதா தெரிவித்தாா்.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரேமலதா தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக முதல்முறையாக திங்கள்கிழமை பதவியேற்றாா். அவருக்கு முதல்வா் விஜய் எழுந்து நின்று வாழ்த்து தெரிவித்தாா்.

பின்னா், பேரவைக்கு வெளியே செய்தியாளா்களிடம் பேசிய பிரேமலதா, ‘என்னை வெற்றி பெறச் செய்த விருத்தாசலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குகிறேன்.

முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு கட்டாயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மக்கள் பிரச்னைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டப்பேரவையில் பேசுவோம்’ என்றாா்.