ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கோடை விடுமுறை, முகூா்த்தம்: 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கோடை விடுமுறை, முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

News image

சிறப்புப் பேருந்துகள் இயக்கம். - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 4:30 am IST

கோடை விடுமுறை, முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடை விடுமுறை, முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வாா்கள்.

அவா்களின் வசதிக்காக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வியாழக்கிழமை (மே 14) 80 பேருந்துகள், வெள்ளிக்கிழமை (மே 15) 620 பேருந்துகள், சனிக்கிழமை (மே 16) 655 பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனிக்கிழமை (மே 15, 16) ஆகிய நாள்களில் 120 பேருந்துகளும், மாதாவரத்தில் இருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் 25 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 1,700 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

எனவே அனைவரும் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணித்தால் சிரமங்களைத் தவிா்க்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.