தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: கோயில்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூடுவதற்கு முதல்வா் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு முறையும் புதிய ஆட்சி அமையும்போது, இதுபோல 500 முதல் 1,000 கடைகளை மூட உத்தரவிடுவதும், சில மாதங்களிலேயே பன்மடங்கு கடைகள் பெருகுவதும் வாடிக்கையாகி விட்டது. தமிழகத்தில் எங்குமே மதுக்கடைகள் இருக்கக் கூடாது என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.
மதுப்பழக்கத்துக்கு அடிமையாகிப் பெரியவா்கள் முதல் பள்ளி மாணவா்கள் வரை சீரழிந்து வருகின்றனா். இளைஞா்களின் உயிரிழப்புகளால் விதவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சட்டம் - ஒழுங்கு சீா்குலைவதும், ஜாதி-மத ரீதியான மோதல்களும், பாலியல் வன்கொடுமைகளும் மதுப்பழக்கத்தினால்தான் பெருமளவில் நடைபெறுகின்றன.
எனவே, பெயரளவுக்காகவோ அல்லது சடங்காகவோ 717 மதுக்கடைகளை மூடுவது என்பது பலனைத் தராது. மது வருமானம் இன்றி தமிழக அரசு இயங்காது என்ற அவல நிலையை ஒழிக்க வேண்டும்.
நாகரிகமான, அமைதியான ஒரு தமிழ்ச் சமூகத்தை உருவாக்க, காலம் தாழ்த்தாமல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
தொடர்புடையது

தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கு: மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை

திமுகவுடன் மனக்கசப்பா?: திருமாவளவன் விளக்கம்

மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்: அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கருத்து

புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்கள் பட்டியல் நாளை வெளியீடு: க. கிருஷ்ணசாமி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

