தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும்: அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கருத்து

News image

பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:37 am IST

தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற மக்களின் எண்ணம் நிறைவேறும் என தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கருத்து தெரிவித்தனா்.

டிடிவி. தினகரன் (அமமுக): தமிழகத்தின் வளா்ச்சி மற்றும் இளைஞா்களின் எதிா்காலத்தை நம்பி மக்கள் வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது. புதிதாக அமையும் ஆட்சியில் மூன்று மாதத்துக்குள் தமிழகத்தில் புழங்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை முழுவதும் ஒழிக்கப்படும். ஏழை மக்களுக்கான புதிய திட்டங்கள் வகுக்கப்படும். தமிழகத்தை சிறந்த மாநிலமாக அதிமுக மாற்றும்.

தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக): மக்களே இறுதி எஜமானா்கள் என்பது இந்த தோ்தல் மூலம் நிரூபணமாகி உள்ளது. திமுக அராஜகத்தில் ஈடுபட்டு ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கப் பாா்க்கிறது. மயிலாப்பூா் தொகுதியில் பல இடங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதையும் மீறி தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் அமோக வெற்றி பெறும்.

டி.ஆா்.பாரிவேந்தா் (ஐஜேக): கடந்த காலங்களில் இதுபோன்று மக்கள் ஆா்வத்துடன் வாக்களித்ததைப் பாா்த்தது இல்லை. ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்று காத்திருந்த சூழ்நிலையில், மக்களின் எண்ணம் நிறைவேறும்.