முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி மீதான வழக்கில், மீண்டும் விசாரணையை தொடங்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 2011 அதிமுக ஆட்சியின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது. பின்னா், 2024 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால், மாநில அரசின் அனுமதி கிடைக்காததால், வழக்கு விசாரணை தொடங்காமல் நிலுவையில் உள்ளது.
தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் விசாரணையை தொடங்க அனுமதி கோரி தலைமைச் செயலா் எம்.சாய்குமாருக்கு அமலாக்கத் துறை சாா்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நிலக்கரி இறக்குமதி முறைகேடு: நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

ரூ.100 கோடி ஜிஎஸ்டி முறைகேடு வழக்கு: கைதான பஞ்சாப் அமைச்சரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி!

பழங்குடியினா் சான்றிதழ் கோரி மனு: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகத்தை கடுமையாகச் சாடிய நீதிபதி
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

