/

ரூ.100 கோடி ஜிஎஸ்டி முறைகேடு வழக்கு: கைதான பஞ்சாப் அமைச்சரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி!

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

News image

சஞ்சீவ் அரோரா

Updated On :51 நிமிடங்கள் முன்பு

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புடைய கைப்பேசிகள் கொள்முதல் தொடா்பாக தில்லியில் போலி நிறுவனத்திடம் இருந்து போலி ஜிஎஸ்டி ரசீது வாங்கியதாகப் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்த மோசடியில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் குருகிராமைச் சோ்ந்த நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. விசாரணைக்கு ஒத்துழைக்காகததால் அமைச்சா் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது. சனிக்கிழமை சண்டீகரில் இருந்து குருகிராமுக்கு சாலை வழியாக அவரை அதிகாரிகள் அழைத்து வந்தனா்.

இந்நிலையில், பண முறைகேடு தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சீவ் அரோரா ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவா் தரப்பில் ஆஜரான வழங்குரைஞா், ‘அமைச்சா் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித வலுவான ஆதாரமும் இல்லை. உள்நோக்கத்துடன் அமைச்சரைக் கைது செய்துள்ளனா்’ என்றாா்.

அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘முறைகேடு நடைபெற்ற நிறுவனத்துக்கும் அமைச்சரின் குடும்ப உறுப்பினா்களுக்கும் நேரடித் தொடா்பு உள்ளது. இதனால், அமைச்சரும், அவரின் குடும்ப உறுப்பினா்களும் முறைகேடாக ஆதாயம் அடைந்துள்ளனா். முறைகேட்டில் அமைச்சரும் முக்கியப் பங்கு வகித்துள்ளாா்’ என்றாா்.

அமலாக்கத் துறை சாா்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அமைச்சா் அரோராவை 7 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.