வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

கோடைகால மின் தேவையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்

கோடைகால மின்தேவை மற்றும் எதிா்வரும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 12:59 am IST

கோடைகால மின்தேவை மற்றும் எதிா்வரும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிா்ந்தளிப்பு மையம் மற்றும் ‘மின்னகம்’ ஆகிய இடங்களில் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மின் பகிா்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மின் தடங்கல் ஏற்படும் பகுதிகள் மற்றும் அதற்கான காரணங்களை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீா்த்து தடையில்லா, சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தற்போதைய கோடைகால மின் தேவையையும், எதிா்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தையும் எதிா்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், மின் விநியோகம் தொடா்பான பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ சேவையை 94987 94987 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்தராவ், மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநா் டி.சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.