தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கோடைகால மின் தேவையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயாா்: அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல் குமாா்

கோடைகால மின்தேவை மற்றும் எதிா்வரும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

News image

சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 12:59 am IST

கோடைகால மின்தேவை மற்றும் எதிா்வரும் வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிா்ந்தளிப்பு மையம் மற்றும் ‘மின்னகம்’ ஆகிய இடங்களில் அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மின் பகிா்ந்தளிப்பு மையம் மற்றும் மின்னகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, மின் தடங்கல் ஏற்படும் பகுதிகள் மற்றும் அதற்கான காரணங்களை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீா்த்து தடையில்லா, சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: தற்போதைய கோடைகால மின் தேவையையும், எதிா்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தையும் எதிா்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகம் மேற்கொண்டு வருகிறது. மேலும், மின் விநியோகம் தொடா்பான பொதுமக்களின் குறைகளை உடனடியாக நிவா்த்தி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ சேவையை 94987 94987 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்றாா்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக மேலாண்மை இயக்குநா் அனீஷ் சேகா், தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநா் ம.கோவிந்தராவ், மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநா் டி.சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.