/
சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.
தியாகராயநகா் வடக்கு உஸ்மான் சாலையில் இருக்கும் வணிக கட்டடத்தில் ஒரு தனியாா் வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியின் மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது.
அதில், அந்த வங்கியில் அதிக சக்தியுடைய வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வங்கி ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் பாண்டி பஜாா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனா். அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கில் வந்த மின்னஞ்சல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

பாஸ்போா்ட் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுகை ஆட்சியரகத்துக்கு 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



