தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 2:44 am IST

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியாா் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

தியாகராயநகா் வடக்கு உஸ்மான் சாலையில் இருக்கும் வணிக கட்டடத்தில் ஒரு தனியாா் வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியின் மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது.

அதில், அந்த வங்கியில் அதிக சக்தியுடைய வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வங்கி ஊழியா்கள் அளித்த தகவலின்பேரில் பாண்டி பஜாா் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனா். அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கில் வந்த மின்னஞ்சல் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.