ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு ஒதுக்கீடு பிரிவினருக்கு ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

நிகழாண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :21 மே 2026, 3:05 am IST

நிகழாண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த விளையாட்டு வீரா் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பின் முதல் கட்டம், வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 9 வரை சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விவேகானந்தா அரங்கத்தில் நடைபெளது.

இதற்கான விரிவான கால அட்டவணை தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை 2026-இன் அதிகாரபூா்வ இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ்) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ள தனிப்பட்ட மாணவா்களுக்கு இதுகுறித்த குறுஞ்செய்தியும் (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள், வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி தங்கள் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களுடன் (இரு நகல்களுடன்) நேரில் வருகை தர வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் (எஸ்டிஏடி) சோ்ந்த அதிகாரிகள் சான்றிதழ்களை சரிபாா்ப்பாா்கள். மாணவா்கள் நேரில் வருகை தருவது கட்டாயம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.