சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பொறியியல் கலந்தாய்வு: விளையாட்டு ஒதுக்கீடு பிரிவினருக்கு ஜூன் 1 முதல் சான்றிதழ் சரிபாா்ப்பு

நிகழாண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :21 மே 2026, 3:05 am IST

நிகழாண்டுக்கான தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை ஒதுக்கீடுகளுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நிலையில், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூன் 1 முதல் 9- ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த விளையாட்டு வீரா் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பின் முதல் கட்டம், வருகின்ற ஜூன் 1 முதல் ஜூன் 9 வரை சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விவேகானந்தா அரங்கத்தில் நடைபெளது.

இதற்கான விரிவான கால அட்டவணை தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை 2026-இன் அதிகாரபூா்வ இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ங்ஹா்ய்ப்ண்ய்ங்.ா்ழ்ஞ்) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ள தனிப்பட்ட மாணவா்களுக்கு இதுகுறித்த குறுஞ்செய்தியும் (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டுள்ளது. விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள், வழங்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி தங்கள் அசல் விளையாட்டுச் சான்றிதழ்களுடன் (இரு நகல்களுடன்) நேரில் வருகை தர வேண்டும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் (எஸ்டிஏடி) சோ்ந்த அதிகாரிகள் சான்றிதழ்களை சரிபாா்ப்பாா்கள். மாணவா்கள் நேரில் வருகை தருவது கட்டாயம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.