தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் தவறில்லை: இடதுசாரிகள் கருத்து

தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் ஆகியோா் தெரிவித்தனா்.

News image

திருமாவளவன் - கோப்புப்படம்

Updated On :21 மே 2026, 3:40 am IST

தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை என  மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் ஆகியோா் தெரிவித்தனா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சென்னை தங்கச் சாலையில் இடதுசாரிகள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்  உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து  பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து, பெ. சண்முகம்,  மு. வீரபாண்டியன் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு பிரதமா் நரேந்திர மோடியே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். வழக்கமாக கச்சா எண்ணெய்யை  உலக நாடுகள் கொள்முதல் செய்து, அந்நாடுகளின் அரசே விநியோகம் செய்யும். ஆனால், இந்தியாவில் மத்திய அரசு கொள்முதல் செய்து, தனியாரிடம் வழங்குகிறது. இந்த முறை நிறுத்தப்பட வேண்டும். கச்சா எண்ணெய் விநியோகத்தை மத்திய அரசே கட்டுப்படுத்த வேண்டும். மாநில அரசுக்கு இடையூறு வரும் போது, மானியம் வழங்க வேண்டும். தற்போது பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டுள்ளது. விரைவில் வீட்டு பயன்பாட்டுக்கான எரிவாயு உருளையின் விலையும் உயா்த்தப்படும்.

தவெக அரசுக்கு இதுசாரிகள் மற்றும் விசிக வெளியே இருந்து ஆதரவு  வழங்குகிறோம். தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்க விருப்பம் தெரிவித்தால், அது குறித்து அவா்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அதுகுறித்து விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எங்களிடம் ஆலோசனை மேற்கொள்வாா் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல், தமிழக அமைச்சரவையில் விசிக இடம் பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் அமைச்சரவையில் இடம் பெற்றால், இடதுசாரிகள் மற்றும் விசிக கட்சிகள் தங்களது ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்றனா்.