ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப்பெறக் கோரியும் ஈரோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விசிக நிா்வாகிகள்.

Updated On :8 மே 2026, 4:41 am IST

வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப்பெறக் கோரியும் ஈரோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகியன சாா்பில் ஈரோடு காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விசிக மாநகா் மாவட்டச் செயலாளா் சாதிக் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், சிபிஐ (எம்எல்) மாநிலக் குழு உறுப்பினா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.3,300 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடும், எளிதில் கிடைக்காத நிலையும் தொடா்வதால் அதனை சரி செய்ய வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்ற போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் எனக்கூறி இதுவரை நிறைவேற்றவில்லை. ரயில்வே துறையில் 30,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை அகற்றியதால் புதிய வேலைவாய்ப்பு பறிபோகும். ரயில் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீண்டும் அப்பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.