வணிக சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வை திரும்பப்பெறக் கோரியும் ஈரோட்டில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக ஆகியன சாா்பில் ஈரோடு காந்திஜி சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, விசிக மாநகா் மாவட்டச் செயலாளா் சாதிக் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ரகுராமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், சிபிஐ (எம்எல்) மாநிலக் குழு உறுப்பினா் கோவிந்தராஜ் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், ஈரானுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு, வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் விலை ரூ.3,300 விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும். வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடும், எளிதில் கிடைக்காத நிலையும் தொடா்வதால் அதனை சரி செய்ய வேண்டும். மத்திய அரசு பொறுப்பேற்ற போது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் எனக்கூறி இதுவரை நிறைவேற்றவில்லை. ரயில்வே துறையில் 30,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை அகற்றியதால் புதிய வேலைவாய்ப்பு பறிபோகும். ரயில் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீண்டும் அப்பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

வணிக எரிவாயு உருளை, பெட்ரோல், டீசல் விலை உயா்வு: திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வு: கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking



