நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும், அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை சீமான் திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.
வழக்கறிஞரான கயல்விழி, அரசியலில் இருந்து விலகியிருந்த நிலையில், சமீபகாலமாக சீமானுடன் பிரசாரங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில், சீமான் - கயல்விழி தம்பதிக்கு வியாழக்கிழமை காலை இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதாக கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்குடியில் போட்டியிட்ட சீமான் உள்பட நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 234 பேரும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Seeman and Kayalvizhi Welcome a Baby Girl
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களித்தவர்களுக்கு நன்றி; விஜய் தலைமையிலான அரசுக்கு வாழ்த்துகள் : சீமான்

பாபநாசம் நாதக வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும்: சீமான்
என் வாக்காளர்கள் ரசிகர்கள் அல்லர்! சீமான் சிறப்பு நேர்காணல்

இயக்குநர் அட்லி - பிரியா தம்பதிக்கு பெண் குழந்தை!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




