திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

முதல்வர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற சீமான்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் முதல்வர் விஜய் சந்திப்பு பற்றி...

News image

சீமானுடன் முதல்வர் விஜய் சந்திப்பு - முகநூல்

Updated On :11 மே 2026, 5:45 pm IST

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினும் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்று கையைப் பிடித்து அழைத்துச் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரைச் சந்தித்த விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டு வாசலில் காத்திருந்த சீமான், விஜய் வந்ததும் அவரை ஆரத்தழுவி வரவேற்றார்.

சீமானுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

சீமானுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

பின்னர் சீமானுக்கு பூங்கொத்து வழங்கி சால்வை அணிவித்து மரியாதை செய்தார் விஜய். அதேபோல சீமானும் பூங்கொத்து வழங்கி, புத்தகம் அளித்து விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சீமானுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

சீமானுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

தொடர்ந்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோரையும் முதல்வர் விஜய் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

CM vijay meets NTK leader seeman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.