ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

குதிரை பேரம் நடத்தியது யார் என்று நாடறியும்! தவெக அதைச் செய்யவில்லை! செங்கோட்டையன்

குதிரை பேரம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில்

News image

அமைச்சர் செங்கோட்டையன்செங்கோட்டையன். - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 4:33 pm IST

தமிழக வெற்றிக் கழகத்தை பொருத்தவரை குதிரை பேரம் நடத்தவில்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"தவெகவைப் பொருத்தவரை குதிரை பேரம் எதுவும் நடைபெறவில்லை. குதிரை பேரம் நடத்தியவர்கள் யார் என்பதை நாடு அறியும். திமுக ஆதரவுடன் நான் முதலமைச்சர் ஆவேன் என்று சொன்னது யார் ? அதை நீங்கள் தெரிந்து கொண்டு அவர்களிடம் பதில் கேட்டால் சரியாக இருக்கும்.

நானே ராஜிநாமா செய்துவிட்டுதான் தவெகவில் இணைந்தேன். அதனால் ராஜிநாமா செய்தவர்களின் முடிவு அவர்களுடைய ஜனநாயக உரிமை.

6 மாத காலத்திற்கு எதுவும் விமர்சிக்க மாட்டோம் என்று எதிர்க்கட்சி சொன்னார்களா, இல்லையா? நாங்களும் பொறுத்திருந்துதான் ஒவ்வொன்றாக செய்ய முடியும். எங்களுக்கும் ஒரு அவகாசம் தர வேண்டும். குற்றங்கள் நடைபெறும்போது உடனடியாக முதல்வர் அதிரடி நடவடிக்கை எடுத்திருக்கிறார். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையின் மூலமாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நான் யாரையும் அதிமுகவில் இருந்து தவெகவில் சேர்க்கவில்லை. இங்கு வந்த பிறகு என்னைச் சந்திக்கின்றனர்" என்று பேசினார்.

Summary

TVK did not do horse trading: Minister sengottaiyan