ஷ்யாம் சீனிவாசன் எழுதிய'பெட்டர் நெவர் ஸ்டாப்ஸ்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (வியாழன்) நடைபெற்றது. கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் இந்நூலை வெளியிட்டார்.
தி ஃபெடரல் பேங்க் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான ஷ்யாம் சீனிவாசன் 'பெட்டர் நெவர் ஸ்டாப்ஸ்'(Better Never Stops) என்ற நூலை எழுதியுள்ளார். இந்நூல் இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளன. ஒரு பகுதி அவரது அனுபவங்களின் நினைவுத் தொகுப்பாகவும் இதர பகுதி நடைமுறைக்கு ஏதுவான தலைமைத்துவ சிந்தனைகளாகவும் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்நூல் வெளியீட்டு விழா சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், சிட்டி பேங்க் மற்றும் ஃபெடரல் வங்கி போன்ற நிறுவனங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவத்தைப் பெற்றவர் ஷ்யாம் சீனிவாசன்.
இந்நூல் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற தளங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. மேலும் நாடு முழுவதும் முன்னணி புத்தக விற்பனைக் கடைகளிலும் இந்நூலை வாங்கிக்கொள்ளலாம்.
சென்னையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் மிதுன் சசேட்டி (இணை நிறுவனர், காரட்லேன்), கோபால் சீனிவாசன் (தலைவர், டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ்), லட்சுமி நாராயணன் (முன்னாள் தலைமைச் செயல் அலுவலர், காக்னிசன்ட்), கே. மகாலிங்கம் (டிஎஸ்எம் குழுமம்), டிடி. சீனிவாஸ் ராகவன் ( நிர்வாக இயக்குநர், சுந்தரம் ஃபைனான்ஸ்) உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









