கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்!

கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் வினோத் முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது பற்றி....

Minister stops car to help accident victims near Kumbakonam

அமைச்சர் வினோத்

Published On :

கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு அமைச்சர் வினோத் முதலுதவி செய்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேளாண் துறை அமைச்சர் வினோத் கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே வளையப்பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகின. இதில் வாகனங்களில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்து சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

முக்கியமான ஆய்வுக் கூட்டத்திற்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்தபோதிலும், விபத்தைக் கண்டவுடன் சிறிதும் யோசிக்காமல் அமைச்சர் தனது காரை உடனடியாக நிறுத்தி உள்ளார். காரில் இருந்து கீழே இறங்கிய அவர், தனக்குப் பாதுகாப்பாக வந்த காவல்துறையினர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் உதவியோடு காயமடைந்தவர்களை மீட்டு முதலுதவி செய்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து, காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அவர்கள் பாதுகாப்பாக ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பப்பட்டதை உறுதி செய்த பிறகே, அமைச்சர் அங்கிருந்து தஞ்சை கூட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

அவசரப் பணியிடையே மனிதநேயத்துடன் களத்தில் இறங்கி உதவிய அமைச்சரின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

Summary

Minister Vinoth provided first aid to accident victims near Kumbakonam and sent them to the hospital in an ambulance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER