ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

ஆலங்குளத்தில் காவல் துறையினா் அணிவகுப்பு

தைத்திருநாளை முன்னிட்டு ஆலங்குளம் காவல் உள்கோட்டத்தில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 6:43 pm

தைத்திருநாளை முன்னிட்டு ஆலங்குளம் காவல் உள்கோட்டத்தில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னி வளவன் தலைமை வகித்தாா். காவல் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் காவல் நிலையத்தை அடைந்தது. இதே போல் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சிவலாா்குளம், நெட்டூா் மற்றும் கிடாரக்குளத்திலும், ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கடங்கநேரி மற்றும் ரெட்டியாா்பட்டி கிராமங்களிலும், வீரகேரளம்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வீராணத்திலும் இந்த கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இதில், காவல் ஆய்வாளா்கள் சந்திரசேகரன், ரெகுராஜன், தனலட்சுமி, மகாலட்சுமி, மாரீஸ்வரி, ரோஸ்லின் சேவியோ, 12 உதவி காவல் ஆய்வாளா்கள் மற்றும் 50 காவலா்கள் உள்பட மொத்தம் 68 போ் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.