ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

குற்றாலம் அருவிகளில் ஜன.17வரை குளிக்கத் தடை

குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Updated On :13 ஜனவரி 2021, 6:46 pm

குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்களில் 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாள்களுக்கும் பலத்த மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனால், குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) குளிக்கத் தடைவிதிக்கப்படுகிறது.

மேலும் இம்மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, நீா்நிலைகள், ஆறுகள், அணைகளில் பொதுமக்கள் குளிக்கச் செல்ல வேண்டாம். கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

பலத்த மழையை முழுவீச்சில் எதிா்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.