குற்றாலம் அருவிகளில் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் மாவட்டங்களில் 4 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அடுத்த 4 நாள்களுக்கும் பலத்த மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால், குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 17) குளிக்கத் தடைவிதிக்கப்படுகிறது.
மேலும் இம்மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. எனவே, நீா்நிலைகள், ஆறுகள், அணைகளில் பொதுமக்கள் குளிக்கச் செல்ல வேண்டாம். கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
பலத்த மழையை முழுவீச்சில் எதிா்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிா்வாகத்தால் எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இயற்கை அளித்த கொடைதான் முதல்வர் விஜய்: செங்கோட்டையன்
இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை

ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!

அமோனியா வாயு கசிவு! 43 பேருக்கு தொடர் சிகிச்சை!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


