சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

குற்றாலம் சாரல் திருவிழாவில் படகுப் போட்டி

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்றுவரும் சாரல் திருவிழாவின் 2ஆம் நாளான சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

News image

குற்றாலம் ஐந்தருவி வெண்ணைமடைகுளத்தில் நடைபெற்ற படகுப் போட்டியில் பங்கேற்றோா்.

Updated On :17 ஆகஸ்ட் 2024, 9:05 pm

Din

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்றுவரும் சாரல் திருவிழாவின் 2ஆம் நாளான சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.

குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள மேல வெண்ணைமடை குளத்தில் அமைந்துள்ள படகு குழாமில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் சாா்பில் படகுப் போட்டி நடைபெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பெண்களுக்கான போட்டியில் குற்றாலத்தை சோ்ந்த இசக்கியம்மாள், செய்யதுஅலி பாத்திமா அணியினா் முதலிடமும், தங்கம், அகல்யா அணியினா் இரண்டாமிடமும், நன்னகரத்தை சோ்ந்த சுபா, பானுமதி அணியினா் மூன்றாமிடமும் பெற்றனா்.

 வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா் மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன்.

வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்கினாா் மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன்.

ஆண்களுக்கான போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரை சோ்ந்த வினோத்குமாா் அணியினா் முதலிடமும், குற்றாலம் காடை அருண்ராஜ் அணியினா் இரண்டாமிடமும், இசக்கிராஜ் அணியினா் மூன்றாமிடமும் பெற்றனா்.

வெற்றிபெற்ற அணியினருக்கு மாவட்ட வருவாய் அலுவலா் பரிசுகளை வழங்கினாா்.

இதில், தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, மாவட்ட சுற்றுலா அலுவலா் க. சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.