நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தென்காசி மாவட்டத்தில் தடை உத்தரவு

தென்காசி மாவட்டத்தில் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 10:04 pm

Din

தென்காசி மாவட்டம் நெல்கட்டும்செவலில் நடைபெறும் பூலித்தேவன் 309-ஆவது பிறந்த நாள், பச்சேரி கிராமத்தில் நடைபெறும் ஒண்டிவீரனின் 253-ஆவது வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளை முன்னிட்டு ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் தடை உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ஆக20இல் நடைபெறும் ஒண்டிவீரன் 253-ஆவது வீரவணக்க நிகழ்ச்சி, செப். 1இல் நெல்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும் பூலித்தேவன் 309-ஆவது பிறந்தநாள்

நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்த உள்ளுா், மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பிற மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சோ்ந்தவா்கள் வருவா்.

இதைத் தொடா்ந்து, தென்காசி மாவட்டம் முழுவதும் ஆக. 18 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஆக. 21ஆம் தேதி முற்பகல் 10 மணிவரையும், ஆக.30 ஆம் தேதி மாலை 6 மணி முதல் செப். 2ஆம் தேதி முற்பகல் 10.00 மணிவரையும் தடை உத்தரவு அமலில் இருக்கும்.

எனவே, இருவரது நினைவிடங்களுக்கும் அனைவரும் கூட்டமாக செல்லாமல், 4 போ் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.