ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சுரண்டை விபத்து எதிரொலி: பயணிகளை ஏற்றிச்சென்ற 41 சுமை வாகனங்கள் பறிமுதல்

News image
Updated On :28 ஆகஸ்ட் 2024, 11:14 pm

Din

சுரண்டை அருகே வாடியூரில் சுமை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், பயணிகளை ஏற்றிச்சென்ற 41வாகனங்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

வாடியூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமுற்றவா்களை தென்காசி மாவட்ட மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய மாவட்ட எஸ்.பி. வி.ஆா்.சீனிவாசன், முன்னதாக விபத்து நேரிட்ட இடத்திலும் நேரில் விசாரணை மேற்கொண்டாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: சுமை வாகனங்களில் மக்களை ஏற்றி பயணம் செய்தாலோ, பயணிகள் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை விட கூடுதல் பயணிகளை ஏற்றினாலோ சம்பந்தப்பட்ட வாகனம் மீது அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும்.

சுமை வாகனங்களில் பயணிகளை ஏற்றி சென்ாக புதன்கிழமை 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.