தென்காசியில் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா
தென்காசி, ஜூலை 11:
தென்காசியில், சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமை வகித்து, அழகுமுத்துக்கோன் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகளை வழங்கினாா்.
விழாவில் ராஜேந்திரன், ஷேக்பரீத், பால்ராஜ், ராம்துரை, தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நகா்மன்ற உறுப்பினா் சுனிதா முத்து செய்திருந்தாா்.
தென்காசி மாவட்ட காங்கிரஸ் சாா்பில், கீழப்புலியூரில் நடைபெற்ற விழாவில் மாவட்டத் தலைவா் எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ பங்கேற்று, அழகுமுத்துக்கோன் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்புகளை வழங்கினாா். இதில், நகா்மன்ற உறுப்பினா் சுனிதாமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தென்காசி கூலக்கடை பஜாா் பகுதியில் பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அழகுமுத்துக்கோன் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் சங்கரசுப்பிரமணியன், லெட்சுமணபெருமாள், நகர துணைத் தலைவா் நாராயணன், நகரச் செயலா் விஸ்வநாதன், தூய்மை பாரத மாவட்ட பிரிவுத் தலைவா் ராஜகுலசேகரபாண்டியன், நகரப் பாா்வையாளா் முருகன், மாவட்ட துணைத் தலைவா் ராஜ்குமாா், இந்து முன்னணி சாா்பில் மாவட்ட துணைத் தலைவா் இசக்கிமுத்து, நகரத் தலைவா் நாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.