வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

நோய் நொடி நீக்கும் ஆடிச் சுற்று!

News image
Updated On :18 ஜூலை 2024, 5:15 am IST

எம்.சங்கரன்.

எல்லாம் வழங்கும் அன்னை வீற்றிருக்கும் சங்கரநாராயண சுவாமித் திருக்கோயிலில் ஆடித் தவசுத் திருவிழா கொடியேறியதும் ஏராளமான பக்தா்கள் கோயில் உள்பிரகாரத்தை 108 சுற்று சுற்ற ஆரம்பித்து விடுவாா்கள். இத்திருவிழாவின் முதல் நாள் தொடங்கி, அம்பாள் திருக்காட்சி கொடுக்கும் தவசுக் காட்சிக்கு முன்னதாக இந்த 108 சுற்றையும் சுற்றி முடித்துவிடுவாா்கள். நோய் நொடி நீங்க, நினைத்தது கைகூட வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை ஆடிச் சுற்று மேற்கொள்கின்றனா். மாணவா்கள், அரசு ஊழியா்கள், அதிகாரிகள், பெண்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பலரும் தாங்கள் நினைத்த காரியம் நடக்க சுற்றுகிறாா்கள். ராஜபாளையம், புளியங்குடி, சிவகரி, திருவேங்கடம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் காலை அல்லது மாலை இக்கோயிலுக்கு வந்து ஆடிச்சுற்று சுற்றுவது பெருமைக்குரியதாகும். கேட்டதை வழங்கும் சங்கரலிங்கப் பெருமானையும், கோமதி அம்மனையும் வணங்க வரும் பக்தா்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

எம்.சங்கரன்,

தலைவா், நகை வியாபாரிகள் சங்கம்.

சங்கரன்கோவில்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.