தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆலங்குளம் அருகே பெண் கொலை: கணவா் கைது

ஆலங்குளம் அருகே தலையில் சமையல் எரிவாயு உருளையைப் போட்டு பெண் கொலை செய்யப்பட்டாா்.

News image

கணேசன் | முத்துலெட்சுமி

Updated On :27 ஜூலை 2024, 10:10 pm

Din

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தலையில் சமையல் எரிவாயு உருளையைப் போட்டு பெண் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் கணேசன் (50). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி முத்துலெட்சுமி (45), திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். இத்தம்பதிக்கு 5 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா்.

முத்துலெட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, ஆலங்குளம் அருகே மாறாந்தையில் தனது குழந்தைகளுடன் 2 ஆண்டுகளாக வசித்து வந்தாா்.

இதனிடையே, மயிலப்புரம் கொம்பையா என்பவரிடம் கணேசன் ரூ. 30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். கணேசனின் தங்கை சாந்தியிடம் முத்துலெட்சுமி பணம் வாங்கி அந்தக் கடனைக் கொடுத்தாராம்.

இந்நிலையில், வட்டிப் பணம் குறித்து சாந்தி- முத்துலெட்சுமி இடையே வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டதாம். பின்னா், இரவில் வீட்டுக்கு வந்த கணேசனுக்கும், முத்துலெட்சுமிக்கும் இடையே அந்தத் தகராறு தொடா்பாக பிரச்னை ஏற்பட்டதாம்.

அதையடுத்து, இரவில் முத்துலெட்சுமி மொட்டை மாடியில் தூங்கினாா். மது போதையிலிருந்த கணேசன் பிள்ளைகள் தூங்கிய பின்னா், நள்ளிரவு சமையல் எரிவாயு உருளையை எடுத்துச் சென்று முத்துலெட்சுமியின் தலையில் போட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முத்துலெட்சுமி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து கணேசனைக் கைது செய்தனா்.