நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு; குளிக்கத் தடை

மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

News image

மெயின்பால்ஸ்-குற்றாலம் பேரருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

Updated On :29 ஜூலை 2024, 2:47 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த மிதமான சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடைவிதிக்கப்பட்டது.

இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைமுதல் சாரல் மழையுடன் மெல்லிய வெயிலும், குளிா்ந்த காற்றும் நிலவியது. பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி வெள்ளம் சீறிப் பாய்ந்ததால் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.

குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். மாலையில் ஐந்தருவியிலும், பின்னா் பழைய குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அந்த அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், அவா்கள் ஏமாற்றமடைந்தனா்.