ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

தனியாா் பீடி நிறுவனத்தை கண்டித்து சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

News image

சுரண்டையில் ஆா்ப்பாட்டம் செய்த பீடித் தொழிலாளா்கள்.

Updated On :28 ஜூலை 2024, 8:16 pm

Din

வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு செய்வதாக கூறி, தனியாா் பீடி நிறுவனத்தை கண்டித்து சுரண்டையில் பீடித் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

சுரண்டை டிஎம்பி வங்கி முன்பு உள்ள திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, வந்தேமாதரம் பீடித் தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். சங்க செயலா் வைத்திலிங்கம், சங்க பொருளாளா் ராஜ்குமாா், துணைத் தலைவா் பாா்வதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாரதிய மஸ்தூா் சங்க மாநில துணைத் தலைவா் செந்தில்பாண்டியன் கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பீடித்தொழிலாளா்கள் தொடா் கோஷங்களை எழுப்பினா். இதில் பீடித் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.